பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா..!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு லேசான கரோனா அறிகுறிகள் இருந்ததால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வெள்ளி மதியம் உடல்நிலை மோசமானதாகவும், அவர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளி இரவு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே