கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு இரவோடு இரவோடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் கந்தசஷ்டி கவசம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பல தரப்பில் கண்டனங்கள் எழுந்த நிலையில் கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் தாமாக முன்வந்து புதுச்சேரியில் சரண் அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சென்னை தி நகர், கண்ணம்மாபேட்டையில் இருக்கும் கறுப்பர் கூட்டம் அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு சில ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
அலுவலகத்தை வாடகைக்கு விட்ட நபரிடமும் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.