கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன்‌ கோயிலில்‌ தீ விபத்து..!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயைணப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பகவதி அம்மன் கோயில் . இங்கு தமிழகம் , கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து வேண்டி செல்வர்.மாசிப் பெருந்திருவிழா- 10 நாள் திருவிழா – 10 லட்சம் பக்தர்கள் கூடுவர். மாதாமாதம் பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.

இங்கு பெண்கள் பொங்கலிட்டு வேண்டுவது சிறப்பு.ஊரடங்கு இருப்பதால் யாரும் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்நிலையில் இன்று ( ஜூன்2)காலையில் கோயில் சன்னிதானத்தில் இருந்து பெரும் புகை கிளம்பியது.

இதனை பார்த்த பக்தர்கள் கோயில் நிர்வாகத்தினர் தீயைணப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தீயைணப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோயிலில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே