உன்னோட ஊர் மேப்பில மேல இருக்கிறதால மேலிடம்னு நினைச்சுடாத நீ – கமல் தாக்கு..!! (VIDEO)

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் “உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா” என்ற தலைப்பில் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை காரசாரமாக விமர்சித்துள்ளார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு கமல்ஹாசன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பிரசார வீடியோ வெளியிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியடிகள் சிலையின் கீழ் நின்று பேசுகிற அந்த வீடியோவில் கமல் கூறியுள்ளதாவது:

இவர் (காந்தி) இப்ப உயிரோடு இருந்திருந்தா சந்தோசமா இருந்திருப்பாருன்னு நினைக்கிறீங்களா? இவர் நினைச்ச இந்தியாவின் பெருமை அதிகரிச்சு இருக்குதோ இல்லையோ மற்ற எல்லாம் அதிகரிச்சு இருக்கிறது.

வேலை வாய்ப்பின்மை, கொலை குற்றங்கள், விலைவாசி, பெட்ரோல் விலை எப்படி ஏறி இருக்கு தெரியுமா?

சரி.. இவர் (காந்தி) மாதிரி கோவிச்சுகிட்டு தெருவுல இறங்கி சத்யாகிரகம் பண்ணலாம்னா அதுவும் குண்டும் குழியுமா இருக்கு! ஏன்னா இப்ப எலக்சனுக்காக அவசரம் அவசரமாக போட்ட ஊழல் ரோடுதான இது!

சரி ஊழல் தொலையட்டும் விடுங்க!

அய்யா அம்பேத்கர் கொடுத்த அரசியல் சட்டத்தின் பலத்தில் நம்ம வாழ்ந்திடலாம்னு நினைச்சுகிட்டு இருந்தா…

மேல இருந்து ஒருத்தரு என்ன மொழி பேசுறதுன்னு சொல்றாரு- என்ன சாப்பிடறதுன்னு சொல்றாரு- என்ன சிந்திக்கனும்னு சொல்றாரு..

இந்த தேசத்தை எப்படி நேசிக்கனும்னு அவர் சொல்லி கொடுக்கிறாரு

யோவ்… உன்னோட ஊர் மேப்பில மேல இருக்கிறதால அதான் மேலிடம்னு நினைச்சுடாத நீ..

நீ.. இங்கிருந்து பாரு.. இதுதான் தலைவாசல்…

இப்படி கோவமாக இங்க இருந்து ஒரு ஆள் பேசுவாருன்னு பார்த்தா அங்க போய் இந்த ஆளு கையை கட்டிட்டு நிற்கிறாரு… இதுல சைரன் வேற…

இவங்க வாழ்க்கை ஒளிமயமாக இருக்கனும்… ஆனா நம்ம வாழ்க்கை?

இந்த இருட்டுல இருந்து வெளிச்சத்துக்கு வரனும்னா ஒரே ஒருவழிதான் இருக்கு டார்ச்லைட்…

சீரமைப்போம் தமிழகத்தை! நாளை நமதே!

இவ்வாறு கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே