தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (ஜூன் 14) கரோனா தொற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:
இன்று மட்டும் 18 ஆயிரத்து 782 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக, 7 லட்சத்து 10 ஆயிரத்து 599 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
45 அரசு பரிசோதனை மையங்கள், 34 தனியார் பரிசோதனை மையங்கள் என, 79 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.
இன்று பதிவான உயிரிழப்புகளில், 16 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 22 பேர் அரசு மருத்துவமனைகளிலும் என 38 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இன்று பதிவான உயிரிழப்புகளில் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 31 பேர் மற்றும் இணை நோய் அல்லாதவர்கள் 7 பேர் ஆவர்.
இன்று மட்டும் 1,138 பேர் சிகிச்சையில் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தமாக, 24 ஆயிரத்து 547 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
19 ஆயிரத்து 676 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது.