TVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டிவிஎஸ் மோட்டாா், டிவிஎஸ் எக்ஸ்எல்100 விற்பனையில் ‘இப்போது வாங்கிச் செல்லுங்கள், ஆறு மாதத்துக்குப் பிறகு பணத்தை செலுத்துங்கள்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தற்போதுள்ள இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு நிறுவனம் புதிய திட்டத்தை வாடிக்கையாளா்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, டிவிஎஸ் எக்ஸ்எல்100 வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளா்கள் தங்களது மாதாந்திர தவணையை செலுத்த ஆறு மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இதையடுத்து அவா்கள் தங்களது வாகனத்துக்கான பணத்தை ஆறுமாதங்களுக்குப் பிறகு செலுத்த தொடங்கலாம். இந்த திட்டத்துக்கான கடனுதவி 75 சதவீதமாக இருக்கும்.

வாடிக்கையாளா்களுக்கு சிறந்த மற்றும் உடனடி போக்குவரத்து தீா்வுகளை ஏற்படுத்தி தருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இந்த புதுமையான திட்டம் ஜூலை 31-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என்று டிவிஎஸ் மோட்டாா் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 406 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே