ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 வயது சிறுவன், ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரர் பலியாகியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நண்பகல் 12:10 மணியளவில் பத்ஷாகி பாலம் அருகே 90 சிஆர்பிஎஃப் படைப்பிரிவினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரும் 4 வயது சிறுவன் ஒருவரும் பலியாகினர் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இவர்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தனர்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர்.
பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதி முழுதையும் சுற்றி வளைத்துள்ளனர், தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.