தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு – பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்..!!

தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது என சசிகலாவின் பெயரை குறிப்பிடாமல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 23 மணிநேரம் பயணம் செய்து வந்து சேர்ந்தார் சசிகலா.

பெங்களூரு டூ சென்னை சாலையில் சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்ததால் 23 மனிநேரம் அவர் பயணிக்க நேர்ந்தது.

சென்னைக்கு இன்று அதிகாலைதான் சசிகலா வந்து சேர்ந்தார்.

சசிகலா ஆதரவாளர்களின் இந்த வரவேற்பால் சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில் சசிகலாவின் வரவேற்பு நிகழ்ச்சியை குறிப்பிடாமல், “தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு” என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது” என ட்விட்டரில் மறைமுகமாக விமர்சித்துள்ளார் டாக்டர் ராமதாஸ். 

இன்னொரு ட்விட்டர் பதிவில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறுவது எந்நாளோ? என்கிற கேள்வியையும் டாக்டர் ராமதாஸ் எழுப்பியுள்ளார்.

தற்போதைய சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரம், தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்தும் வருகிறது. இந்த நிலையில் சசிகலாவை ட்விட்டரில் டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே