அவசரகதியில் NEP2020-யை மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பது ஏற்புடையது அல்ல – டிடிவி தினகரன்

கொரோனா பேரிடர் நேரத்தில் அவசரகதியில் புதியக் கல்விக்கொள்கையை மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பது ஏற்புடையது அல்ல என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கல்விக் கொள்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன் “நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்படி விவாதித்து, உரிய திருத்தங்களைச் செய்து செயல்படுத்துவதற்கு பதிலாக, கொரோனா பேரிடர் நேரத்தில் அவசரகதியில் மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பது ஏற்புடையது அல்ல” என தெரிவதித்துள்ளார்.

மேலும் “இதில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அம்சங்களைப் புறந்தள்ளிவிட்டு, அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தேவையானதை மட்டும் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்துள்ளார் டிடிவி தினகரன்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே