சூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாரில் விசாரணை தொடக்கம்..!!

அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பா மீது புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட விசராணை ஆணையம் பணிகளை தொடங்கியுள்ளது.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில் விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் இன்று பொறுப்பேற்றுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை விசாரிக்கக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், உயர்கல்வித்துறை துணைச் செயலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி. உள்ளிட்ட 5 பேர் விசாரணைக் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8 பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே