நடிகர் விவேக்கிற்கு ‘எக்மோ’ கருவியுடன் தீவிர சிகிச்சை..!!

நடிகர் விவேக்கின் இதய செயல்பாட்டை சீர் செய்ய ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிரபல நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு மருத்துவமனையில் ‘எக்மோ’ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் செய்ய எக்மோர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதின் மூலம் உடல்நிலை பின்னடைவை சரி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நடிகர் விவேக் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என அவரது பிஆர்ஓ நிகில் முருகன் சென்னையில் பேட்டியளித்தார்.

அத்துடன் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஆனால் தற்போது விவேக்கிற்கு ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே