நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
கிறிஸ்ட்சர்ச்சில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், இஷாந்துக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர்.
தொடக்க வீரராக களமிறங்கிய அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிம் சௌத்தி பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
அடுத்து களத்திற்கு வந்த ராஹனே 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆவுட்டாக, இந்திய அணி தற்போது வரை 122 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.
செதேஷ்வர் புஜாரா 33 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.