பொள்ளாச்சி வழக்கில் 5 பேருக்கு வரும் 11-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் கைதான 5 பேரையும் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை காவலில் வைக்க கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, மணிவண்ணன், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் இருந்தவாறே திங்கட்கிழமை வீடியோ காண்பரன்சிங் மூலம் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிமன்ற காவலை ஒரு நாள் நீட்டிப்பதாக கூறிய நீதிபதி, வெள்ளிகிழமை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனையடுத்து 5 பேரும் கோவை அழைத்து வரப்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

5 பேரையும் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே