சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் IG பொன் மாணிக்கவேலுக்கு உடல்நலக் குறைவு

ஓய்வு பெற்ற முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், டி.அரசப்பட்டியை சேர்ந்தவர் பொன் மாணிக்கவேல். டி.எஸ்.பி., எஸ்.பி., உளவுத்துறை டி.ஐ.ஜி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.ஐ.ஜி., மற்றும், அதே பிரிவில், ஐ.ஜி., என பல உயர் பதவிகள் வகித்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இருப்பினும் சென்னை உயர் நீதிமன்றம் இவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது.

அதன்படி ஓராண்டு பணியாற்றிய இவர் கடந்த ஆண்டு தனது பணியை நிறைவு செய்தார்.

இந்நிலையில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருதயம் தொடர்பான கோளாறால் தஞ்சை தனியார் மருத்துவமனையில் பொன்மாணிக்க வேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே