துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஒரு ஆலமரம், அதிருப்தியில் உள்ள திமுகவினர் யார் வந்தாலும் நிழல் கொடுக்கும் என கூறியுள்ளார். திமுக பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அவசிய தேவைக்கு மட்டும் வெளியே செல்ல வேண்டும் எனவும் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள மண்டலங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.