கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.50லட்சம் கனஅடி நீர் திறப்பு..!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 1.50 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தலா 70 ஆயிரம், நுகு அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, ஹாரங்கி அணைகள் நிரம்பியுள்ளன. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலையில் 116.30 அடிக்கு நீர் இருந்தது.

அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 55,563 கன அடியாக உள்ளது. கா்நாடக அணைகளின் உபரிநீா் மேட்டூா் அணைக்கு வியாழன் முதல் வரத் தொடங்கியுள்ளது.

நீா்வரத்து அதிகரிப்பதால் மேட்டூர் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 67.97 அடியாக உயா்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து விநாடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் 70.05 அடியாக உயர்ந்துள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே