நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன் என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:
ரஜினியை சென்னை சென்ற பிறகு சந்திப்பேன். அவர் நலனை விசரிப்பேன்.
அவர்களின் நலனில் அக்கறை கொலவத்தில் நானும் ஒருவன். அரசியல் பயணம் ரஜினி அவர் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாக இருக்குமேயானால் அதை நான் வரவேற்கின்றேன்.
எங்களுக்கு ஆதரவு தருமாறு ரஜினியிடம் கேட்பேன்.
புதுக்கோட்டை சிறுமி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக்கு நான் எதிரானவன். இன்னொரு உயிரை எடுப்பதால் சரி ஆகிவிடாது.
பெண் குழந்தைகளை சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவுரை கூறி வளர்க்கவேண்டும்.
எனது தேர்தல் அறிக்கை மக்களை மையப்படுத்தி இருக்கும்.
எனது தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டும் என்பது கட்சியின் ஆசை. வருகின்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நான் போட்டியிடுவேன்.
திராவிடம் என்பது அனைவருக்கும் சொந்தம். அதை இரண்டு பேருக்கு மட்டும் பிரித்து கொடுக்கவில்லை. திராவிடம் என்பது அனைவருக்கும் சொந்தம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.