தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேச உள்ளார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டில் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்ற நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி ஆளுநரை சந்திக்க உள்ளார்.
கரோனா தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை பற்றி ஏற்கனவே ஆளுநரை சந்தித்து முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
வரும் 14-ஆம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேச உள்ளார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டில் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்ற நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி ஆளுநரை சந்திக்க உள்ளார்.
கரோனா தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை பற்றி ஏற்கனவே ஆளுநரை சந்தித்து முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
வரும் 14-ஆம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.