உயரத்தையும் தலைமுடியையும் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளேன் : தமிழிசை

தனது முடியையும் உயரத்தையும் பற்றி கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநர் பதவி ஏற்று எடுப்பதன் மூலம் தக்க பதிலடி கொடுத்து உள்ளதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அரசியல் கட்சியில் சேர்ந்து விட்டால், டாக்டர் பட்டம் பெற்று விடலாம் என்று இன்றைய இளைஞர்கள் நினைப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேடையில் இருப்பவர்கள் கடின உழைப்பால் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்றும் அவர் கூறினார்.

பிறர் கிண்டல் செய்வதை எண்ணி கவலைப் படாமல், தடைகளைத் தாண்டி, குறிக்கோள் நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே