பெருங்குடல் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? எப்படி குணப்படுத்தலாம்?

பெருங்குடல் புற்றுநோயானது பெருங்குடலில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு நோயாகும். இதற்கு நமக்கு நம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் கூட ஒரு வித காரணம் ஆகிறது. பெருங்குடல் புற்றுநோயை விரட்ட உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன்படும் மாத்திரைகள் பயன்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெருங்குடல் புற்றுநோய் என்பது நம் பெருங்குடலையும் மலக்குடலையும் பாதிக்கிறது. தற்போது நாம் அனைவரும் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் தான் நமக்கு பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை உண்டாக்குகிறது. அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் கூற்றுப்படி, 21 ஆண்களில் 1 பேரும், அமெரிக்காவில் 23 பெண்களில் 1 பேரும் தங்கள் வாழ்நாளில் பெருங்குடல் புற்றுநோயை உருவாக்குகிறார்கள். இதற்கு ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையே காரணம் ஆகும். இதற்கு உடல் பருமன் கூட ஒரு ஆபத்து காரணியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வகை புற்றுநோய்க்கான சிகச்சையானது புற்றுநோயின் அளவு, இருப்பிடம் மற்றும் உடல்நிலை உள்ளிட்ட பல காரணிகளை பொருத்தது. இதற்கு சிகச்சை முறைகளாக கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகள், அறுவை சி‌கி‌ச்சைகள் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.
​ஆராய்ச்சி
ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் நோயாளிகளின் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. ஆஞ்சியோடென்சின் மாற்றும் என்சைம் இன்ஹிபிட்டர் (ACE-i) அல்லது ஆஞ்சியோடென்சின் II ஏற்பி தடுப்பான் (ARB) மருந்துகள் இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் போன்ற நிலைமைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் ஆஞ்சியோடென்சின் என்ற வேதிப்பொருளைத் தடுக்கின்றன. இதனால் தமனிகள் குறுகிவிடுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

​இரத்த அழுத்த மாத்திரைகள்
பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த நாளங்களை நிதானமாக வைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழான ஹைபர்டென்ஷனில் வெளியிடப்பட்ட தற்போதைய ஆய்வில், இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. எனவே ஆராய்ச்சியாளர்கள் இதற்கான சாத்தியமான கூறுகள் குறித்து இன்னும் ஆராய்ந்து வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஆய்வின் ஆரம்பத்தில் பெருங்குடல் புற்றுநோய் இல்லாத நோயாளிகளின் ஒரு பெரிய குழுவை அடிப்படையாகக் கொண்டு அதன் மூலம் பெருங்குடல் புற்றுநோய் வளர்ச்சியில் ACE தடுப்பான்கள் மற்றும் ARB களின் பயனுள்ள பலன்களைக் காண்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

​குறையும் விகிதம்
பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து கிட்டத்தட்ட 22 சதவீதம் குறைகிறது. புற்றுநோய் வளர்ச்சியில் ACE தடுப்பான்கள் மற்றும் ARBகளின் பங்கு சர்ச்சைக்குரியதாக உள்ளது. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் ஆய்வு முடிகள் முரண்படுகின்றன. முந்தைய ஆய்வுகளின் முடிவுகள் அனைத்தும் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டது. தற்போதைய ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் 2005 முதல் 2013 வரை ஹாங்காங்கில் 187,897 வயது வந்த நோயாளிகளின் சுகாதார பதிவுகளை பெருங்குடல் புற்றுநோய்க்கான எதிர்மறை அடிப்படை கோலோனோஸ்கோபி மூலம் ஆய்வு செய்துள்ளனர். ACE-i அல்லது ARB கள் போன்ற உயர் இரத்த அழுத்த மருந்துகளை உட்கொண்டவர்களுக்கு அடுத்தடுத்த மூன்று ஆண்டுகளில் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 22 சதவீதம் குறைவாக இருப்பதை அவர்கள் இதன் மூலம் கண்டறிந்துள்ளனர்.

​55 வயது மேற்பட்டவர்களுக்கு அதிக நன்மைகள்
ACE-i மற்றும் ARB களின் நன்மைகள் 55 அல்லது அதற்கு மேற்பட்ட நோயாளிகளில் காணப்பட்டன. பெருங்குடல் பாலிப்களின் வரலாறு மற்றும் மருந்துகளுடன் தொடர்புடைய நன்மை எதிர்மறை அடிப்படை கோலோனோஸ்கோபிக்குப் பிறகு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ள நோயாளிகளால் ACE-i மற்றும் ARB கள் எடுக்கப்படுகையில், பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பது உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளைத் தேர்ந்தெடுக்கும்போது மருத்துவர்கள் கருத்தில் கொள்ள இது கூடுதல் காரணியாக இருக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு இரண்டு விதமான நன்மைகள் கிடைக்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

​எச்சரிக்கை
இருப்பினும் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு ஆராய வேண்டியிருக்கிறது. இருப்பினும் இதை நோயாளிகளிடம் பயன்படுத்துவது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சாதாரண வயிறு வலி என்றோ, நாமே ஏதாவது கை வதை்தியம் செய்து கொள்ளலாம் எனறோ அல்லது நன்றாகத் தான் சாப்பிடுகிறோம், அஜீரணக் கோளாறுகளோ வேறு எந்த பிரச்சினையும் இல்லை, லேசான வயிறு வலி தானே அதெப்படி பெரிய பிரச்சினை ஆகும் என்று வழக்கமான அஜாக்கிரதையோடு இருக்காதீர்கள். யாருக்கு வேண்டுமானாலும் மேற்சொன்ன காரணங்களால் பெருங்குடலில் புண் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே