அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா…

கொரோனாவுக்கு அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,939 பேர் பலியாயினர்; 28,123 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், ஐரோப்பியா, அமெரிக்காவில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது.

ஐரோப்பியாவில் பலி எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,939 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 42,514 ஆக உயர்ந்தது.

புதிதாக 28,123 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பும் 7,92,759 ஆக உயர்ந்துள்ளது.

வட அமெரிக்காவில் இதுவரை 8,51,396 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை 45,433 பேர் பலியாகி உள்ளனர். இங்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புள்ள நாடாக கனடா உள்ளது.

தென் அமெரிக்காவில் 86,486 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,079 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் அதிகபட்சமாக 40,743 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே