போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் அரசு எச்சரிக்கை..!!

போக்குவரத்து ஊழியர்கள் வியாழக்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே விடுப்பு விண்ணப்பித்தவர்களும் வியாழக்கிழமை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை (பிப்.25) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே