மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட மூன்று இடங்களிலும், நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த, முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 5ஆம் தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் அரசாணையில், மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே