தமிழ்நாட்டில் இன்று 811 பேருக்கு கொரோனா..; 11 பேர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் புதிதாக 811 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன.

புதிதாக 811 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,23,181 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 228 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 943 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 8,03,328 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்றைய அறிவிப்பில் மேலும் 11 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,188 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 7,665 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே