தம் மீது நிகழ்வில் இருக்கக்கூடிய வழக்குகளை நிபந்தனைகளில்லாமல் முடித்து வைக்க வேண்டும் என தொழிலதிபர் விஜய் மல்லையா ட்வீட் செய்துள்ளார்.
மத்திய அரசின் கோவிட் 19 நிவாரண தொகுப்பைக் குறிப்பிட்டு அதற்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்ட விஜய் மல்லையா, “அரசாங்கம் எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை அச்சிடலாம். ஆனால் முழு கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ள என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏன்?
வங்கிகளுக்கு நான் செலுத்தவேண்டிய கடனை முழுமையாக தருகிறேன் அதை பெற்றுக் கொண்டு என் மீது இருக்கக்கூடிய வழக்குகளை நிபந்தனையின்றி முடித்து வைக்கவும்” என ட்வீட் செய்துள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார மீட்புத் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
அதில் முதல் கட்டமாக ரூ. 6 லட்சம் கோடிக்கான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.