மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை..!!

தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை வீசி வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவை உள்ளதா? என்றும் பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே