மே 1, 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு ?? – தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்..!!

வரும் மே 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்யும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார் சத்யபிரத சாகு.

அப்போது அவர் பேசுகையில், மே 2-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளோம்.

தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வரும் மே 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, மே 1, 2-ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே