தமிழக காங்கிரஸின் மூத்த நிர்வாகியும், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏவுமான டி.யசோதா இன்று காலை காலமானார்.
யசோதா ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
அதனால் சத்தியமூர்த்தி பவன் முன்பு போராட்டம் கூட நடத்தியவர் இவர்.
உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யசோதா சிகிச்சை பலனின்றி காலமானார் . இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.