இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை..!!

அமலில் இருக்கும் இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால், ஊடகவியலாளர்கள் அதாவது மீடியாக்களில் பணிபுரிபவர்களுக்கு இ-பதிவு அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.

எனவே, இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து உணவு டெலிவரி ஊழியர்கள் வைத்துள்ள கோரிக்கையில், கொரோனா பரவி வரும் இந்த இக்கட்டான நிலையில் இ-பதிவு கட்டாயம் என்பதால் குறித்த நேரத்தில் உணவுகளை டெலிவரி செய்ய முடியவில்லை.

எனவே எங்களுக்கு இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஸ்விக்கி, ஜோமோட்டோ ஊழியர்கள் அரசுக்கு வைத்த தங்கள் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே