2022 கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 2023 ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகளும் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிபா கத்தார் உலக கோப்பை கால்பந்து 2022-ல் நடக்கிறது.
அதேபோல் ஆசிய கோப்பை கால்பந்து 2020-ல் நடைபெற இருந்தது. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் அடுத்த மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நடைபெற இருந்தது.
கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் 2021-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது போட்டி எங்கெல்லாம் நடைபெற இருந்ததோ, அதே இடத்தில் அடுத்த வருடம் நடைபெறும். பிபா மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது.