#FIFAWorldCup2022: 2022 கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு..!!

2022 கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 2023 ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகளும் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிபா கத்தார் உலக கோப்பை கால்பந்து 2022-ல் நடக்கிறது.

அதேபோல் ஆசிய கோப்பை கால்பந்து 2020-ல் நடைபெற இருந்தது. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் அடுத்த மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நடைபெற இருந்தது.

கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் 2021-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது போட்டி எங்கெல்லாம் நடைபெற இருந்ததோ, அதே இடத்தில் அடுத்த வருடம் நடைபெறும். பிபா மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே