குடியரசுத் தினத்தன்று தடையை மீறி டெல்லிக்குள் நுழைவோம்..!!

மத்திய அரசுடன் நாளை நடத்த உள்ள பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி டெல்லியை நோக்கி டிராக்டர்களில் பேரணி நடத்தப்போவதாக மத்திய அரசுக்கு விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜபாட்டையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக விவசாயிகளின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளிக்கவில்லை என்றும்; குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலை குறித்த உறுதிமொழியை சட்டமாக்க முயற்சிக்கவில்லை என்றும் விவசாயிகள் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

கடும் குளிரிலும் பனியிலும் இன்று 39வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே