விடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் – மைக்ரோசாப்ட் அறிவிப்பு..!!

கால் நூற்றாண்டு காலமாக மக்களால் பயன்படுத்தி வரப்படும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அடுத்த ஆண்டு ஜூன் 15ம் தேதியுடன் விடைபெறுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

1996 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்கிற தேடுதளத்தை ( பிரவுசர் ) உருவாக்கியது.

இணையவாசிகளிடம் முதன்முதலில் மிகவும் புகழ்பெற்றது இந்த தேடுதளம். உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட தேடுதளங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்தான் முதலிடம் பெற்றது.

இதில் தனியார் நிறுவனங்கள் பல விளம்பரங்கள் அழித்து தங்களது பொருட்களை விளம்பரப்படுத்தின. ஆன்லைன் வர்த்தகமும் முதன்முதலில் செழிப்படைந்தது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் மூலமாகத்தான்.

இதனை அடுத்து கூகுள் குரோம், மொசில்லா ஃபயர்பாக்ஸ், எம்.எஸ்.என், யூசி ப்ரவுசர், ஒபேரா மினி உள்ளிட்ட பல தேடுதளங்கள் உருவாகின.இதனையடுத்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை குறைந்தது. 

நாளடைவில் 1985ம் ஆண்டுக்குமேல் பிறந்தவர்கள் பயன்படுத்தும் பழைய சர்ச் இன்ஜினாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கருதப்பட்டது.

தற்போது உலகம் முழுவதும் கூகுள் குரோம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கணினி மொழி புரியாதவர்களுக்குக்கூட எளிதில் அவற்றைக் கற்பிக்கும் வகையில் எளிதாக வடிவமைக்கப்பட்டிருந்தது கூகுள் நிறுவனத்தின் குரோம்.

இதற்காகவே பலர் கூகுள் குரோம்-ஐ பயன்படுத்தி தேடலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கடந்த 26 ஆண்டுகளாக தாங்கள் உருவாக்கிய தேடுதளமான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தேடுதளம் செயல்படும். அதன்பின்னர் நிரந்தரமாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சார்ந்த செயலிகள் மற்றும் இணையதளங்கள் 2029ஆம் ஆண்டுவரை செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இச்செய்தி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே