அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர விலக்கு: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு !!

அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து சேவை தொடங்கப்படாததால் மாற்றுதிறனாளி அரசுப் பணியாளர்களுக்கு அலுவலக பணிகளில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 6ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இருப்பினும் 3ம் கட்டமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அரசு பணிகள், தொழிற்சாலைகள் ஆகியவை 50% பணியாளரிகளுடன் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே