மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை நாள் நானூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இதில் நெடுந்தீவு அருகே இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது.

அவர்களது இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறைப்பிடித்த மீனவர்கள் 8 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே