மழை சமயத்துல நோய்த்தொற்று உங்கள பாதிக்காம இருக்க இந்த 5 மூலிகை கலந்த சிரப் குடிங்க…

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே உடலில் சோம்பல் வரும். நோயெதிர்ப்பு ஆற்றல் குறையத் தொடங்கும் என்று சொல்வார்கள். அப்படி எதுவும் ஆகாமல், நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்ய நம்முடைய பாரம்பரிய முறைப்படி சில மூலிகைகளை வைத்து வீட்டிலேயே எப்படி செய்து சாப்பிடலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
மழைக்காலம் நெருங்கிவிட்டது என்றாலே ஊர் முழுவதும் வைரஸ் காய்ச்சல் ஜலதோஷம் தொண்டை வலி இருமல் போன்ற பல நோய்கள் பரவ ஆரம்பித்து விடும். அதோடு ஏற்கனவே உயிரைக் குடித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம், லாக்டவுன் குறித்த மன அழுத்தம் என ஏகப்பட்ட ஆரோக்கியப் பிரச்சினைகள். இது போன்ற குளிர் காலங்களில் மற்ற வைரஸ் மற்றும் கிருமிகளின் தாக்கமும் அதிகமாக இருக்கும். வைரஸ் கிருமிகளின் தாக்கம் நீங்கள் காணும் பல பேரிடம் இருக்கும். இதன் மூலம் காய்ச்சல் போன்ற வியாதிகள் வரும். இந்த வைரஸ் கிருமிகளிடமிருந்து தப்பிப்பது கஷ்டம் மேலும் நோய் பாதித்த மக்களிடம் இருந்தும் விலகி இருப்பது கஷ்டம்.
என்ன தான் செய்ய முடியும்?
நாம் செய்ய வேண்டியதெல்லாம் முடிந்த அளவு நமது எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது. எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க நவீன மருத்துவ முறைகள் பக்க விளைவுகள் கொண்டதாகப் பலரும் நினைக்கிறார்கள். எனவே இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய நிவாரணங்களைப் பற்றி இப்பொழுது காணலாம்.இதை உபயோகித்து மழைக்காலங்களில் நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

​நோயெதிர்ப்பு சக்தி
நமது உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தியானது நோய்களை எதிர்த்துப் போராடும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்களால் உருவானவை. ரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் சில ஆன்டிபாடிகள் கொண்டவை. இருப்பினும் நம்மில் பலருக்கு எதிர்ப்புச் சக்தி என்பது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. மேலே குறிப்பிட்ட நோய்கள் எளிதாக உங்களைத் தாக்கும் என்றால் உங்களுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம். இதுபோன்ற எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள நபர்கள் கீழே சொல்லக்கூடிய சிரப்பை தங்களின் தினசரி உணவில் எடுத்துக் கொள்வது அவசியம். இவை இயற்கையாகவே நல்ல பலன் மற்றும் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது.மேலும் இவை மிகவும் விரைவான நிவாரணத்தைக் கொடுக்கக் கூடியது என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பாகக் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம், மழைக்கால நோய்களிலிருந்து நிவாரணம் தரக்கூடிய அந்த பானத்தைத் தயாரிக்கும் முறையைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
​சிரப் தயாரிக்கும் முறை
ஜின்ஜெங்க் வேர் 1

ஆப்பிள் சீடர் வினிகர் தண்ணீரில் கலக்கியது 1 கப்

மஞ்சள் ஒரு டேபிள் கரண்டி

மிளகு 5 – 6 அல்லது கைநிறைய

பெருஞ்சீரக விதை ஒரு டேபிள் ஸ்பூன்

கிராம்பு சிறிது

வெள்ளைப்பூண்டு சிறிது

இஞ்சி அரை

ஆரஞ்சு பழத்தோல் அரை கப்

தேன் தேவைப்பட்டால்.

​தயாரிக்கும் முறை
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து ஒரு மருந்தாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த மருந்து உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இந்த மருந்தில் மூலிகைகளின் நன்மை மற்றும் இயற்கையின் நன்மைகள் அடங்கி இருக்கிறது. இதில் உள்ள ஆப்பிள் சிடார் வினிகர் என்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. குளிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய மருந்தாக மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த மருந்தாகும். மேலும் இதில் உள்ள காரணி இயற்கையாகவே கிருமிகள் அழிக்கும் வல்லமை படைத்தது.

​சிரப் ரெடி
மருந்தைத் தயாரிக்க முதலில் அனைத்து பொருளையும் நன்றாக ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் வைத்திருக்கும் அனைத்தையும் போட வேண்டும். பின்பு அதை நன்றாகக் காய்ச்ச வேண்டும், சிறிது கெட்டியாகும் வரை காய்ச்ச வேண்டும் காய்ச்சிய பிறகு ஆற விட வேண்டும்.பின்பு அதில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றவேண்டும் அதன் பின்னர் சிறிது தேன் அதில் சேர்க்க வேண்டும். அதாவது பாதி ஆப்பிள் சிடார் வினிகர் அளவிற்குத் தேன் சேர்க்க வேண்டும். 20 நிமிடத்தில் உங்கள் பானம் தயாராகிவிட்டது. இதை நேரடி சூரிய வெளிச்சத்தில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் அப்படி வைத்துக் கொண்டால் ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

​மருந்தின் நன்மைகள்
இந்த மருந்தைத் தினமும் குடித்து வருவது நமது உணவுக் கட்டுப்பாட்டுக்கும், மிகுந்த நன்மை விளைவிக்கும் .பனிக்காலத்தில் வரக்கூடிய நோய்களுக்கு மட்டுமில்லாமல் உணவுக்கட்டுப்பாடு இருப்பவர்களுக்கும் எப்படி உதவுகிறது என்றால், இதில் உள்ள இயற்கையான காரணியானது அனைத்து நோய்களையும் விரட்டி அடிக்க வல்லமை படைத்தது. இதில் உள்ள மஞ்சள் மிளகு போன்றவை ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளவை.

அது இயற்கையாகவே கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. மேலும் இந்த மருந்து முழுக்க முழுக்க வைட்டமின்களால் ஆனவை. குறிப்பாக விட்டமின் சி இதில் மிக அதிக அளவில் உள்ளது. இதில் உள்ள ஆரஞ்சு பழத் தோலில் அதிகமாக விட்டமின் சி உள்ளது அதனால் நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். குறிப்பாக, இது மழைக்காலங்களில் நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, சுத்தமாக வைத்திருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே