மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா! தற்போதைய நிலை பற்றி லேட்டஸ்ட் விவரம்.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா இருவரும் தற்போது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை இரவு நடிகர் அமிதாப் பச்சன் திடீரென மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட கொரோனாவுக்கான லேசாக அறிகுறிகள் தெரிந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்கு பிறகு அமிதாபுக்கும்,அபிஷேக் பச்சனுக்கும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் அவர்களுக்கு தொற்று இருந்தது உறுதி ஆனது. அதற்கு பிறகு அபிஷேக்கின் மனைவி
ஐஸ்வர்யா ராய், குழந்தை ஆரத்யா உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கும் முடிவு பாசிட்டிவ் என்று தான் வந்தது.
அதனை தொடர்ந்து அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யாவை மட்டும் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். அதனால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே இருந்தனர். அமிதாப் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு பங்களாக்களை அதிகாரிகள் அதற்கு பிறகு சீல் வைத்தனர்.

தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை அமிதாப் பச்சன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதை பார்த்த சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுவதாக ட்விட்டரில் கமெண்ட் செய்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யா இருவரும் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஐஸ்வர்யா ராய்க்கு சில அறிகுறிகள் அதிக ஜுரம் இருந்ததால் உடனே அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு அதிக அளவு காய்ச்சல் மற்றும் thoroat infection இருந்துள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது நிலை நிலையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். மேலும் ஆராத்யாவுக்கும் லேசான காய்ச்சல் இருந்தது என்றும், அது தற்போது சரியாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமிதாப் பச்சன் குடும்பம் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியானது அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் குணமடைய வேண்டும் என அனைத்து பக்கங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள பல கோவில்களில் அமிதாப் பச்சனின் குடும்ப புகைப்படத்தை வைத்து அவர்கள் விரைவில் நலம் பெற பூஜை, யாகம் நடத்தப்பட்டு இருக்கின்றன. அது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொல்கத்தாவில் உள்ள ரசிகர்கள் சிலர் அமிதாப் குடும்பம் முழுமையாக குணமாகும் வரை தொடர்ந்து யாகம் நடத்த உள்ளதாக அறிவித்துளள்னர். ஞாயிற்று கிழமை முதல் யாகம் துவங்கி நடைபெற்று வருகிறது என்று கூறி உள்ளனர். அவர்கள் முதலில் யாகத்தை துவங்கிய ஒரு கோவிலில் அதிக மழை காரணமாக தண்ணீர் தேங்கிவிட்டதனால் வேறு ஒரு இடத்திற்கு அதனை மாற்றி உள்ளனர். அந்த கோவில் அருகில் உள்ள பிளாட் ஒன்றில் தற்போது யாகம் நடைபெற்று வருகிறது.

“நாங்கள் யாகத்தை பச்சன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குணமாகும் வரை தொடர்ந்து நடந்த உள்ளோம். அது சில நாட்கள் மட்டும் தான் என நங்கள் நம்புகிறோம்” என அமிதாப்பின் ரசிகர் மன்ற நிர்வாகி கூறி உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே