உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் அமைச்சரும், திவொற்றியூர் எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திமுக மீனவரணி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கே.பி.பி. சாமி, 2006-2011 வரையிலான திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
பின்னர் 2016ல் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
57 வயதான அவர் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில் காலமானார்.
அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.