2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது திமுக!

தமிழகத்தில் 16ஆவது சட்டமன்றத் தேர்தல் 2021 மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கியுள்ளது.

அதன்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிக்கான பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகளை அடுத்த மூன்று வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு பொறுப்பாளர், இரண்டு துணை பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்ட வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டப் பின்னர் ஒவ்வொரு குழுக்களிலும் 10 பேர் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதன்மூலம் விரைவில் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும் என தெரிகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே