ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் 5ந் தேதி முதல் விநியோகம்..

நியாயவிலைக் கடைகளில் ஆகஸ்டு மாதத்துக்கான இன்றியமையாப் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன்கள் 1, 3, 4 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளன.

உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஆகஸ்டு மாத இன்றியமையாப் பொருட்களை ஒரு நாளைக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு நாள், நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஆகஸ்டு 1, 3, 4 ஆகிய நாட்களில் வீடுவீடாகச் சென்று டோக்கன்களை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஐந்தாம் தேதியில் இருந்து பொருட்களை வழங்க ஏதுவாக முழு அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை முறையாக வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்டு ஏழாம் நாள் வெள்ளிக்கிழமை நியாயவிலைக் கடைகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே