வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகம், தெற்கு கேரளா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2,3,4ஆம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கியது.

பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கடந்த வாரம் நிவர் புயல் கரையை கடந்தது. புயலினால் தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள், குளங்கள்,நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

மத்திய தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் புயலாக மாறும் என இந்தியவானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் டிசம்பர் 2,3,4ஆம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 2ஆம் தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே