தாய்லாந்தில் பிரதமர் அலுவலகம் முன்பு சீர்த்திருத்தங்களை கொண்டுவரக்கோரி ஆர்ப்பாட்டம்..!!

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில், ராணி சுதிதா மற்றும் இளவரசர் தீபாங்கோர்னின் வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலகக்கோரி, கடந்த 3 மாதங்களாகவே போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

போராட்டத்தை ஒடுக்க பொது இடங்களில் 5 பேருக்கு மேல் ஒன்று கூடக்கூடாது என அவசர ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே பிரதமர் அலுவலகம் முன்பு திரட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும், ஜனநாயகத்தை வாழ வைக்கவேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.

தாய்லாந்து மன்னர், அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்த காவல்துறையினரும் குவிந்தததால் அப்பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது.

கடந்த ஆண்டு தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரதமர் பிரயுத் சானோச்சாவை பதவி நீக்கவும் மன்னர் மகா வஜிரலோங்க்கோர்னின் அதிகாரங்களை குறைக்கவும் வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே