டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் சிலையை பிரதமர் நரேந்திரமோடி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார்.

“அவரது சிலை அனைவருக்கும் தேசத்தின் மீதான பக்தியையும் தீவிரமான அன்பையும் கற்பிக்கிறது என்று நம்புகிறேன்.

இது விவேகானந்தர் வாழ்க்கையின் மிக உயர்ந்த செய்தி. ஒற்றுமை குறித்த பார்வையில் இது நாட்டிற்கு ஊக்கமளிக்கட்டும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே