மும்பையைச் சேர்ந்த டி.வி. நடிகர் சமீர் ஷர்மா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரபல டிவி சீரியல் நடிகர் சமீர் ஷர்மா தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மலாட் வெஸ்ட்டிலுள்ள அவரது வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்ட நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை விசாரித்து வரும் மலாட் போலீசார், சமீர் ஷர்மா இறந்து இரண்டு நாட்களாகியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.
டி.வி. நடிகர் சமீர் வீடு உள்ள குடியிருப்பின் செயலாளர் தினேஷ் பப்னா கூறுகையில் ”காவலாளி சென்றபோது அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
சமையலறை ஜன்னலை திறந்தபோது நடிகர் சமீர் ஷர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது” என்றார்.
அண்மையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தியிலிருந்தே பலரும் மீளாமல் இருக்கின்றனர் தற்பொழுது இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.