கொடிகட்டிப் பறக்கும் போதை மருந்து கடத்தல் மாபியா கும்பலை வேட்டையாடும் போலீஸ் அதிகாரி என்பதே தர்பார் படத்தின் மூலக்கதையாக இருக்கிறது.

மும்பையில் போலீஸார் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்த சூழலால் அங்கு பணியாற்றும் போலீசார் வேலையை விட்டு செல்லும் மனநிலையில் இருக்கின்றனர்.

அப்போது, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் ரஜினி மும்பை காவல் துறை ஆணையராக பொறுப்பேற்கிறார்.

இதனை அடுத்து, போதை மருந்து மாபியா கடத்திய பல பெண்களை அவர் காப்பாற்றுகிறார். மேலும், ஒரு அரசியல் பிரபலத்தின் மகனையும் காப்பாற்றுகிறார்.

போதை மருந்து மாபியாவின் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை நகரத்தை தனது கட்டுப்பாட்டில் ரஜினி கொண்டு வருகிறார்.

போதை மருந்து மாபியாவை ஒழித்துக்கட்ட நினைக்கும் ரஜினி, தொழிபதிபரின் மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதை கண்டறிந்து அவரை கைது செய்கிறார்.

எனினும், மகனை வெளியே கொண்டு வர தொழிலதிபர் பல வழிகளில் முயற்சிக்கிறார்.

பல தடைகளை சந்தித்த ரஜினி, அவரின் மகனை கொல்கிறார். இதன் பின்னரே, கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு ஏற்படுகிறது.

கொல்லப்பட்டவரின் தந்தை உலகளவில் போதை மருந்து கடத்தல் செய்து வரும் தாதா சுனில் ஷெட்டியின் மகன் என பின்னர் தெரிய வருகிறது.

தனது மகளைக் கொன்ற சுனில் ஷெட்டியை என்ன செய்தார் என்பது மீதிக்கதை.

படம் முழுக்க முழுக்க ரஜினியின் படமாகவே இருக்கிறது. தனக்கே உரித்தான ஸ்டைல், வசன உச்சரிப்பு என்று எனர்ஜிடிக் ஆக படம் முழுவதும் ரஜினி இருக்கிறார்.

காலா, பேட்ட என்று தொடர்ந்து வயதான கேரக்டரில் தோன்றிய ரஜினி, இந்தப்படத்தில் கொஞ்சம் இளமையான தோற்றத்தில் வருகிறார்.

இவருக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாராவுக்கு பெரிய அளவில் படத்தில் இடமில்லை. எனினும், ரஜினியின் மகளாக நடித்த நிவேதா தாமஸ் கவனிக்க வைக்கிறார்.

யோகிபாபுவின் காமெடி, அனிருத்தின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. கண்ணுல திமிரு பாட்டும், ரயில்வே ஸ்டேஷன் சண்டைக் காட்சிகளும் படத்தில் ரசிகர்கள் மிகவும் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.

அடுத்து என்ன நடக்கும்? என்பதை படம் பார்ப்பவர்கள் கணிக்கும் வகையில் இருப்பது கதையின் பலவீனம். படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களை சோர்வடைய வைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே