ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீடிப்பு – ட்ரம்ப்

கொரோனா வைரஸால், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்காவே உள்ளது.

அமெரிககாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய்க்கு அடுத்த இருவாரங்களில் பலி எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீடிப்பதாகவும் இறப்பு விகிதம் அடுத்த இருவாரங்களில் உச்சநிலைக்குச் செல்லும் எனவும், ஜூன் 1ம் தேதிக்கு மேல் தான் கொரோனாவிற்கு விடிவு பிறக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே