தமிழகத்தில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் இறுதி வரை ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு சில மாநில அரசுகள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே, ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கும் என்று அறிவித்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் மாஸ்க் எதுவும் அணியாமல் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், இம்முறை அவர் மாஸ்க் அணிந்துள்ளார்.

உத்தவ் தாக்கரே உள்ளிட்ட சில மாநில முதல்வர்களும் மாஸ்க் அணிந்துள்ளனர்.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களுடன் மோடி பேசி வருகிறார்.

இதில் முதல்வர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில், முடக்கத்தை நீட்டிப்பது பற்றிய இறுதி முடிவை நாளையோ, நாளை மறுதினமோ மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற 14-ஆம் தேதி முதல் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை நீக்கிவிட முடியாது என பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருப்பதால், ஒரு சில பகுதிகளில் அல்லது குறிப்பிட்ட சில மணி நேரம் ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே