#BREAKING : உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ;

தொடக்கத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. அவரது சிடி ஸ்கேன் முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தது.

இருந்தும் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முதல் அவருக்கு லேசான இருமல் இருந்து வந்ததை அடுத்து, இன்று செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, அமைச்சர் கே.பி. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால், அமைச்சர் தரப்பில் இது மறுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே