தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே நேரத்தில் உயிரிழப்புகளும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
16பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,201ஆக அதிகரித்துள்ளது.
இன்று 2,325 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50,074 ஆக அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,201ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 4 நாட்களுக்கு மேலாக ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.
அந்த வகையில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் மேலும் 3,943 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.