டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு கடந்த ஜூன் 7 ஆம் தேதி லேசான காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அவர் தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

தொடர்ந்து, அவருக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை அல்லது நாளை காலை பரிசோதனை முடிவுகள் வர வாய்ப்புள்ளது.

கடைசியாக அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளுடன் தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

அந்த கூட்டத்துக்குப் பின்னர் அவர் நேரடியாக எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு நீரிழிவு நோயும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே