ஜெ.அன்பழகன் உடல்நிலை சிறுது முன்னேற்றம் அடைந்துள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
பின்னர் நேற்று அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மேலும் அவருக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாவும் தெரிவித்தது.
இந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஜெ.அன்பழகன் உடல்நிலை சிறுது முன்னேற்றம் அடைந்துள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜெ.அன்பழகனுக்கு 80% ஆக்சிஜன் வழங்கப்பட நிலையில், தற்போது 67% மட்டுமே தேவை என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.